தகடூர் தமிழ் இணையப் பயிலரங்கும் தமிழ்ச் சங்க விழாவும்
Google Buzz Logo

கடந்த ஞாயிறன்று (14 செப்டெம்பர் 2008) தருமபுரியில் காலை 10:00 மணிக்கு விஜய் வித்யாலயா மேனிலைப் பள்ளிஅரங்கில் தமிழ் இணையப் பயிலரங்கும் அன்று மாலை 6:00 மணிக்கு பெரியார் அரங்கில் தமிழ்ச் சங்க விழாவும் நிகழ்ந்தது.

  • பயிலரங்குக்கு சில நாட்களுக்கு முன் தான் முனைவர். மு. இளங்கோவன் உடனான எனது மின்னஞ்சல் தொடர்பும் தொடங்கியது. தமிழ்மணம் காசி அவர்கள் என்னைப் பற்றி முனைவர். மு. இளங்கோவனிடம் கூறியிருக்கிறார். தருமபுரி பயிலரங்கம் குறித்த விவரங்களை முனைவர் எனக்கு மின்மடலில் அனுப்பியிருந்தார்.

  • முனைவர் மு.இளங்கோவனை முதல் முறையாய் சந்தித்தேன். சனியன்று இரவே தருமபுரி வந்தடைந்தார். புகைப்படத்தில் உள்ளது போலவே இருக்கிறார் என்பதால் எளிதாய் அடையாளம் கண்டுகொண்டேன்.

  • பேருந்து நிலையத்தில் சந்தித்த பின் மருத்துவர். கூத்தரசன் (பயிலரங்கு மற்றும் விழா ஏற்பாட்டாளர்) அவர்களின் இல்லத்திற்கு வந்தடைந்தோம்.

  • தமிழ் இணையத்தில் நுட்பப் பங்களித்து வரும் பலரின் பணிகள் குறித்து பேசிக் கொண்டிருந்தோம்.

  • சத்தமில்லாமல் தமிழ் இலக்கியத்தில் மாபெரும் சாதனைகள் படைத்த பல பெரியோர்கள் குறித்து இடுகைகளை பதிவு செய்து வருவதாகவும், அவர்களை சந்தித்தது குறித்த சுவையான பல தகவல்களையும் முனைவர். மு. இளங்கோவன் உற்சாகமாய் விளக்கிக் கொண்டிருந்தார்.

  • மருத்துவர். கூத்தரசன் தருமபுரி நகரில் எங்கள் பகுதியை சேர்ந்தவர். எனது பங்களிப்புகளை பற்றி அறிந்து, எனது செயலிகளுக்கு தகடூரின் பெருமை மிக்கவர்களின் பெயர் வைப்பதை குறித்து குறிப்பிட்டு பாராட்டினார்.

  • ஞாயிறன்று பயிலரங்கில் சந்திப்பதாய் கூறி விடை பெற்றேன்.

  • மறுநாள் காலை முகுந்த் 9:25 மணியளவில் தருமபுரி வந்தடைந்தார். அவரை வரவேற்று சிறிது இளைப்பாறிய பின் நானும் அவரும் பயிலரங்கம் நடக்கும் அரங்கத்துக்கு வந்தடைந்தோம்.

  • விரிவான அறிமுகத்துக்கு பின் பயிலரங்கம் துவங்கியது. முனைவர். மு. இளங்கோவன் மின்னஞ்சல் துவங்குவதில் தொடங்கி வலைப்பதிவு உருவாக்கம். பின்னூட்டம். கூகிள் உரையாடல் என பலவற்றை விளக்கினார். இடையிடையே நானும் முகுந்தும் அவருக்கு உதவி செய்தோம்.

  • பயிலரங்கு ஒரு மணியளவில் முற்று பெற்றது. இந்தப் பயிலரங்கின் பயனை அறிய வருகையாளர் சிலரை முனைவர் மு. இளங்கோவன் மேடைக்கு அழைத்தார்.

  • பெரும்பாலான பார்வையாளர்கள் கணினியில் தமிழை பயன்படுத்துவது இவ்வளவு எளிதானது என பயிலரங்குக்கு பின்னரே அறிந்ததாகவும் உடனடியாய் வலைப்பதிவு துவங்கி தத்தமது படைப்புகளை வலையேற்றப் போவதாகவும் கூறிய போது, அவர்களுள் ஒரு ஐம்பது பேராவது வலைப்பதிய வருவார்கள் என்று தோன்றியது.

  • பயிலரங்குக்கு பின் மருத்துவர். கூத்தரசன் அவர்கள் இல்லம் வந்தடைந்தோம். மாலை தமிழ்ச் சங்க விழாவுக்கு வருவதாகக் கூறி விடை பெற்றேன்.

  • மாலை தமிழ்ச் சங்க விழாவில் கலந்து கொண்டேன். எனக்கு தமிழ் கற்றுக் கொடுத்த தமிழாசிரியர்கள், தகடூரைச் சேர்ந்த பல தமிழ் இலக்கியப் பங்களிப்பாளர்களால் அரங்கம் நிறைந்திருந்தது.

  • செயலர் உரைக்குப் பின் எனக்கு "இணையத் தமிழ் மென்பொருளறிஞர்" விருது அளித்தனர். எனது தமிழாசிரியர்களுக்கு முன் நான் பிறந்த மண்ணில் தமிழ்ச் சங்க விழாவில் இத்தகைய ஒரு விருது பெற்ற போது நான் அடைந்த மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் ஏதும் இல்லை.

  • ஐதராபாத் சேல்ல வேண்டிய தொடர்வண்டிக்கு நேரமானதால் விழாவின் நடுவிலேயே விடைபெற்று தொடர்வண்டி நிலையத்துக்கு வந்து சேர்ந்தேன்.

  • தமிழ்ச் சங்க விழாவில் முனைவர். மு. இளங்கோவன் மற்றும் தமிழா! முகுந்த் ஆகியோரின் விருது மற்றும் உரைகளை கேட்க இயலாமல் போனது குறித்து சிறு வருத்தம். எனினும், ஒலி/ஒளிப் பதிவு செய்யப் பட்டிருப்பதால் பின்னர் அதில் பார்த்துக் கொள்ள இயலும் என்பதால் சற்று ஆறுதலாய் உள்ளது.
விரிவான செய்திகள் மற்றும் படங்களை முனைவர் திரு. மு. இளங்கோவன் அவர்களின் கீழ்கண்ட இடுகைகளில் காணலாம்:

1 கருத்து(க்கள்):

Kasi Arumugam |

பாராட்டுக்கள் கோபி. தொடர்ந்து பணி சிறக்க வாழ்த்துகள்.