மாட்டிக்கிட்டியேடா மாதவா!
Google Buzz Logo

மரணப் படுக்கையில் இருக்கும் மனைவி கனவனிடம் -

மனைவி: நான் செத்துப் போயிட்டா நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்குவீங்களா ?
கனவன்: சேச்சே! உன் நினப்பிலேயே கடைசி காலம் வரை இருந்துருவேன்
மனைவி: ம்ஹூம். நீங்க கண்டிப்பா என்னை மறந்து இன்னொரு கல்யாணம் பண்ணிக்கனும்
கனவன்: எப்படிம்மா உன்னை மறப்பேன். இப்படி எல்லாம் பேசக்கூடாது.
மனைவி: அதெல்லாம் முடியாது. இன்னொரு கல்யாணம் பண்ணித்தான் ஆகனும்
கனவன்: சரி. பண்ணிக்கறேன்
மனைவி: அப்படி பண்ணிக்கிட்டா, அவளோட நம்ம படுக்கையில தான் தூங்குவீங்களா?
கனவன்: கண்டிப்பா! வேற எங்க தூங்குறது
மனைவி: நம்ம கல்யாணப் போட்டோவ எடுத்துட்டு புது கல்யாணப் போட்டோவ வச்சிப்பீங்களா ?
கனவன்: ஆமா, இல்லன்னா உன் ஞாபகம் அடிக்கடி வருமே.
மனைவி: அவளுக்கு புதுசா பட்டுப் புடவையெல்லாம் வாங்கித் தருவீங்களா ?
கனவன்: இல்லை அவளுக்கு சுடிதார் தான் புடிக்கும்
மனைவி: !!!!?????
கனவன்: (மனசுக்குள்) அடடா, மாட்டிக்கிட்டியேடா மாதவா. ஓட்ட வாய்டா உனக்கு

0 கருத்து(க்கள்):